×

மது அருந்தியபோது தகராறு - தலையில் கல்லைப் போட்டு ஆங்கிலோ இந்தியர் கொலை : நண்பர் கைது

சென்னை: பெரம்பூர் பாஸ்கன் தெருவில் நேற்று முன்தினம் காலை ஆங்கிலோ-இந்தியர் ஒருவர், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து செம்பியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கொலையானவர் பிரைன் கிளார்க் (46) என்பது தெரியவந்தது. மேலும் இவருக்கென வீடு கிடையாது. அப்பகுதியில் சாப்பிட்டு விட்டு, பாஸ்கன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் இரவில் தூங்குவது வழக்கம். அவரது கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து பார்த்தனர். போலீசார் விசாரணை மற்றும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில்,  ஓட்டேரி சேமாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த சேகர் (46) என்பவரும், இறந்த ஆங்கிலோ-இந்தியர் பிரைன் கிளார்க் என்பவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.நேற்று முன்தினம் மதியம் பெரம்பூரில் உள்ள ஒரு கடையில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரைன் கிளார்க் சேகரை கையால் தாக்கி உள்ளார்.  இருவரும் கை கைலப்பில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இருவரையும் அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு, அதிகாலை பெரம்பூர் பாஸ்கன் தெருவில் கிளார்க் தூங்கும்  போது அவரது தலையில் சேகர் கல்லை தூக்கிப்போட்டு சாகடித்து விட்டு சென்றது தெரியவந்தது.  இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். கிளார்க்கின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.  போலீசார் நேற்று மாலை சேகரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Angela ,killing , Anglo-Indian, murder, friend arrested
× RELATED விருதுநகர் வெடி விபத்தில் 4 பேர்...